2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

இறுதிப்போட்டிற்கு தாவடி காளியம்பாள் விளையாட்டுக்கழகம் தகுதி

Kogilavani   / 2013 டிசெம்பர் 27 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

நா.நவரத்தினராசா

கிளிதட்டு (தாச்சி) விளையாட்டுப் போட்டியில் தாவடி காளியம்பாள் விளையாட்டுக்கழக அணி இறுதிப்போட்டிற்கு தகுதி பெற்றது.

யாழ். மாவட்ட கிளித்தட்டு விளையாட்டுச் சங்கத்தின் அனுசரணையுடன் வலி. தெற்கு பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தினால் கிளிதட்டு சுற்றுப்போட்டி நடத்தப்பட்டு வருகின்றது.

இச்சுற்றுப் போட்டியின் அரையிறுதிப் போட்டிகள் உதயசூரியன் விளையாட்டு மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகின்றன.
மின்னொளியில் நடத்தப்படும் இச்சுற்றுப் போட்டியில் நேற்று (26) இரவு நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், மயிலட்டி கண்ணகி விளையாட்டுக் கழகமும் தாவடி காளியம்பாள்  விளையாட்டுக் கழகமும் மோதின.

இரு அணிகளும் சம பலம்பொருந்திய அணிகள் என்பதனால் முதல் பாதியாட்டத்தில் 03:03 என்ற பழங்கள் அடிப்படையில் சமநிலையில் இருந்தது.

இரண்டாம் பாதியாட்டத்தில் தாவடி காளியம்பாள் விளையாட்டுக்கழகம் 03:00 என்ற பழங்கள் அடிப்படையில் முன்னிலைப் பெற்று,  ஆட்ட நேர நிறைவில், 06:03 என் பழங்கள் அடிப்படையில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X