2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

கிளித்தட்டுப் போட்டியில் தையிட்டி வள்ளுவன் விளையாட்டுக் கழகம் சம்பியன்

Kogilavani   / 2013 டிசெம்பர் 30 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


நா.நவரத்தினராசா


கிளித்தட்டு விளையாட்டுப்போட்டியில் தையிட்டி வள்ளுவன் விளையாட்டுக் கழகம் சம்பியனாகியது. 

யாழ். மாவட்ட கிளித்தட்டு  விளையாட்டு சங்கத்தின் அனுசரணையுடன் வலி.தெற்கு பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தினால் கிளித்தட்டு சுற்றுப்போட்டியொன்று நடத்தப்பட்டு வந்தது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை (29) நடைபெற்ற இறுதிப்போட்டியில், தாவடி காளியம்பாள் விளையாட்டுக் கழகமும் தையிட்டி வள்ளுவன் விளையாட்டுக் கழகமும் மோதின.

முதல் பாதியாட்டத்தில் தையிட்டி வள்ளுவன் விளையாட்டுக் கழகம் 03:02 என்ற பழங்கள் அடிப்படையில் முன்னிலையில் இருந்தது.

இரண்டாம் பாதியாட்டத்தில் காளியம்பாள் விளையாட்டுக் கழகம் பழம் பெற முடியாத நிலையில், தையிட்டி வள்ளுவன் விளையாட்டுக் கழகம் 03:00 என்ற பழங்கள் அடிப்படையில் முன்னிலை பெற்று, ஆட்ட நேர முடிவில் 06:02 என்ற பழங்கள் அடிப்படையில் வெற்றி பெற்றது.

இதில் வெற்றிபெற்ற வள்ளவன் விளையாட்டக்கழக அணிக்கான வெற்றிக்கிண்ணத்தை வடமாகாண சபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் வழங்கி கௌரவித்தார்.

இரண்டாம் இடத்தை பெற்ற காளியம்பாள் விளையாட்டுக்கழகத்திற்கான வெற்றிக் கிண்ணத்தை வடமாகாண சபை உறுப்பினர் இம்மானுவல் ஆனல்ட் வழங்கி கௌரவித்தார்.   



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X