2025 ஜூலை 09, புதன்கிழமை

மண்முனை வடக்கு பிரதேச மட்ட தெரிவுப் போட்டி

Thipaan   / 2014 செப்டெம்பர் 27 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


ஜனாதிபதி சவால் கிண்ண அணிக்கு 6 பேர் கொண்ட கிரிக்கெட் சுற்றுப் போட்டிக்கான, மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச மட்ட தெரிவுப் போட்டி,   மட்டக்களப்பு சிவானந்தா பொது மைதானத்தில் இன்று சனிக்கிழமை (27) ஆரம்பமானது.

இப்போட்டி நாளை ஞாயிற்றுக்கிழமை (28) நிறைவு பெறவுள்ளது.

இதன்போது மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்து பதிவு செய்யப்பட்ட 42  விளையாட்டுக் கழகங்கள் பங்கு கொண்டன.
ஒரு பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து ஒரு கழகம் வீதம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலிலிருந்தும் 14 கழகங்கள் தெரிவு செய்யப்படவுள்ளன.

இவ்வாறு தெரிவு செய்யப்படும் 14 கழகங்களுக்கிடையிலான மாவட்ட மட்ட கிரிக்கெட் தெரிவுப் போட்டி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் மட். சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளதாக தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ் இதன்போது கூறினார்.

ஜனாதிபதி சவால் கிண்ண அணிக்கு 6 பேர் கொண்ட தேசிய மட்ட கிரிக்கெட் சுற்று இறுதிப் போட்டிக்காக மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து  4 கழகங்கள் தெரிவு செய்யப்படவுள்ளன.

இப்போட்டிகள் யாவும், நீலப்படையணி, தேசிய இளைஞர் சேவை மன்றம், கிழக்கு அபிவிருத்தி மன்றம், இலங்கை இராணுவம் ஆகியவற்றின் அனுசரணையில் நடைபெறுவதாகவும் தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ் மேலும் கூறினார்.
 
இப் போட்டியில், ஜனாதிபதியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் அருண் தம்பிமுத்து, மட்டக்களப்பு மாவட்ட உதவி செயலாளர் எஸ்.இரங்கநாதன், இளைஞர்  சேவைகள் மன்றத்தின் கிழக்குமாகாணப் பணிப்பாளர் கே.தவராசா, வவுணதீவு பிரதேச  செலாளர் எஸ்.சுதாகர், மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் எம்.உதயகுமார், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராசா, 231ஆவது இராணுவ படைப்பிரிவின் கட்டளைத்தளபதி பாலித்த பெர்ணாண்டோ, இளைஞர்  சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ், அம்பாறை வஜகாராதிபதி சஞ்சிந்தரிய தேரர், மற்றும், மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகஸ்தர்கள், விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .