George / 2015 மார்ச் 23 , பி.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
-எஸ்.எம்.அறூஸ்
சம்மாந்துறை பிரதேச செயலக விளையாட்டுப் போட்டியின் ஒரு அங்கமான கால்பந்தாட்ட போட்டியில் ஏசியன் விளையாட்டுக் கழகம், சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
ஏசியன் விளையாட்டுக் கழகத்துக்கும், றோயல் விளையாட்டுக் கழகத்துக்கும் இடையிலான இறுதிப்போட்டி, ஞாயிற்றுக்கிழமை(22) சம்மாந்துறை மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இதில் 3-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் ஏசியன் விளையாட்டுக் கழகம் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இப்போட்டிக்கு பிரதான நடுவராக எம்.எச்.ஹம்மாத் கடமையாற்றினார். உதவி நடுவர்களாக ஜே.பஸ்மீர், எம்.எம்.அஸ்மி அகியோர் செயற்பட்டனர். இப்போட்டிக்குரிய சகல ஏற்பாடுகளையும் விளையாட்டு உத்தியோகத்தர் எஸ்.எல்.தாஜூதீன் மேற்கொண்டிருந்தார்.
23 minute ago
51 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
51 minute ago
1 hours ago
4 hours ago