Kogilavani / 2015 ஏப்ரல் 09 , மு.ப. 09:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்
கண்டி, வத்துகாமம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கிடையிலான கால்பந்தாட்ட போட்டியில், மடவளை மதீனா மத்திய கல்லூரி செம்பியனானதுடன் சிறந்த கால்;;பந்தாட்ட வீரனாக மதீனா அணியின் கெப்டன் உசாமா பாசில் தெரிவு செய்யப்பட்டார்.
15 வயதுக்கு கீழப்பட்டவர்களுக்காக இப்போட்டி நிகழ்த்தப்பட்டது.
வலல ஏ.இரத்நாயக்கா மத்திய கல்லூரியில் இடம்பெற்ற பரிசளிப்பு நிகழ்வில், மத்தி மாகாண சபை உறுப்பினர்; சட்டத்தரணி சுனில் அமரதுங்க பிரதம அதிதியாகக் கலந்து பரிசில்களை வழங்கினார்.
மடவளை மதீனா மத்திய கல்லூரியானது ஏற்கனவே நடந்த போட்டிகளில் இரஜவெல தேசிய கல்ல}ரி, வத்துகாமம் மத்திய கல்லூரி, திகனை அல்-ஹிக்மா வித்தியாலயம் என்பவற்றுடன் போட்டியிட்டு வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.

4 minute ago
14 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
14 minute ago
34 minute ago