R.Tharaniya / 2025 ஜூலை 17 , மு.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்தில்நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் உயிர்காக்கும் சாம்பியன்ஷிப்பில் (2025 Commonwealth Lifesaving Championships) உயிர்காக்கும் போட்டியில் இலங்கை தங்கப் பதக்கம்வென்றுள்ளது.
இந்தப் போட்டி கடந்த10 ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை இங்கிலாந்தின் வேல்ஸில் நடைபெற்றது.
இதில் 32 காமன்வெல்த் (Commonwealth) நாடுகளைச் சேர்ந்த 75 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.
இலங்கைக்காக ஹிருணாடி சில்வா மற்றும் மீதும் மெண்டிஸ் ஆகிய இருவரும் பங்கேற்றுதங்கப் பதக்கம் வென்றனர் 12.50 மீட்டர் ஆழத்தில் இருந்து ஒருவரை 10 வினாடிகளுக்குள் மேற்பரப்புக்கு இழுக்கும் உலகின் வேகமான விளையாட்டு நிகழ்வுகளில் ஒன்றான "லைன் த்ரோ" (Line Throw) போட்டியில் பங்கேற்ற ஹிருணா டி சில்வா மற்றும் மீண்டும் மெண்டிஸ், 09.98 வினாடிகளில் போட்டியை முடித்து தங்கப் பதக்கத்தை வென்றனர்.
இந்தப்போட்டியில் ஹிருணா டி சில்வா"மிகவும் சிறந்த வளர்ந்து வரும் தடகள வீரர்" (Most OutstandingEmerging Athlete) விருதையும் வென்றார்.


15 minute ago
26 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
26 minute ago
30 minute ago