2025 ஜூலை 17, வியாழக்கிழமை

32 சாதனைகள் முறியக்கப்பட்டன

Super User   / 2014 ஜூன் 26 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


- நா.நவரத்தினராசா, குணசேகரன் சுரேன்


வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான தடகள மற்றும் மைதான நிகழ்வுகளில் இதுவரையில் 32 சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதிக் கல்விப்பணிப்பாளர் க.சத்தியபாலன் வியாழக்கிழமை (26) தெரிவித்தார்.

வடமாகாணக் கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள் 5 கட்டங்களாக இடம்பெற்று வருகின்றன.
 
ஏப்ரல் 1 ஆம் திகதி ஆரம்பமான மேற்படி போட்டிகளின் முதலாம், மற்றும் இரண்டாம் கட்டப் போட்டிகள் முல்லைத்தீவு மாவட்டத்திலும், மூன்றாம் கட்டப் போட்டிகள் வவுனியா மாவட்டத்திலும், நான்காம் கட்டப் போட்டிகள் யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெற்று முடிந்தன.
 
5 ஆம் கட்டப் போட்டிகளான தடகள மற்றும் மைதான நிகழ்வுகள் திங்கட்கிழமை (23) முதல் யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை (27) ஆம் திகதி வரையிலும் நடைபெறவுள்ள மேற்படி போட்டிகளில், இதுவரையில் 32 முன்னைய சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
 
மேலும் இதுவரையிலும் முடிவடைந்த தடகள மைதான நிகழ்வுகளின் அடிப்படையில் வலிகாமம் கல்வி வலயம் 248 புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.







 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X