Simrith / 2025 மார்ச் 06 , பி.ப. 01:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரவில் கதவுகளைத் தட்டுவதும், குடியிருப்பாளர்கள் கதவைத் திறக்காதபோது ஆக்ரோஷமாக நடந்து கொள்வதுமாக கெக்கிராவ பகுதியில் ஒரு காட்டு யானை அசாதாரண நடத்தையை வெளிப்படுத்துவதாகக் கூறப்படுகிறது
இந்த சம்பவம் கெக்கிராவை சாஸ்திரவெல்லிய பகுதியில் பதிவாகியுள்ளது.
உள்ளூர்வாசிகளின் கூற்றுப்படி, யானை இரவில் வீடுகளை நெருங்கி, கதவுகளைத் தட்டி, அவற்றைத் திறக்க முயற்சிக்கும். குடியிருப்பாளர்கள் பதிலளிக்கத் தவறும் போது, யானை தாக்கி கதவுகளை உடைத்துவிடும்.

சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தில், குடியிருப்பாளர்களுக்கு இரவில் தங்கள் வீட்டுப் பிரதான கதவைத் தட்டும் சத்தம் கேட்டுள்ளது. அவர்கள் ஜன்னலுக்கு வெளியே பார்த்தபோது, வெளியே ஒரு காட்டு யானை இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பயந்துபோன அவர்கள், வீட்டின் உள்ளே ஒரு அறையில் ஒளிந்து கொண்டனர். சிறிது நேரம் தொடர்ந்து தட்டிய பிறகு, யானை இறுதியில் கதவை உடைத்து, கதவுச் சட்டத்தின் ஒரு பகுதியை பூட்டு மற்றும் சாவியுடன் பிடுங்கிக் கொண்டு, கலாவேவ தேசிய பூங்காவை நோக்கி தப்பி ஓடியுள்ளது.
கதவை சேதப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், யானை அருகிலுள்ள வாழைத் தோட்டத்தையும் சேதப்படுத்தியது.
சம்பவத்தால் பாதிக்கப்பட்ட வீடு சாஸ்திரவெல்லிய பகுதியைச் சேர்ந்த காமினி ராஜபக்ஷ என்பவருக்கு சொந்தமானது.

32 minute ago
33 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
33 minute ago
40 minute ago