2026 மார்ச் 19, வியாழக்கிழமை

ஜப்பான் தூதரக உயரதிகாரி புத்தளத்திற்கு விஜயம்

Janu   / 2023 செப்டெம்பர் 20 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான ஜப்பான் தூதரகத்தின் அரசியல் பிரிவின் உயரதிகாரி கனா மொரிவாக்கி ( Kana Moriwaki ) தலைமையிலான குழுவினர் செவ்வாய்க்கிழமை (19) புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரிக்கு விஜயம் செய்தனர்.

கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்ஹ் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் குறித்த குழுவினரை வரவேற்றதுடன் ,  புத்தளத்தின் சமகால அரசியல், கல்வி, பொருளாதாரம், சுகாதாரம், வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு நிலைமைகள் தொடர்பாக  கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்ஹ் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிமிடம் கேட்டறிந்துகொண்டனர்.

அத்தோடு, காஸிமிய்யா அரபுக் கல்லூரி வளாகத்தை பார்வையிட்ட அக்குழுவினர், அங்கு கல்வி பயிலும்  மாணவர்களையும் சந்நித்து கலந்துரையாடினர்.

மேலும், கல்லூரிக்கு வருகை தந்த குழுவினருக்கு கல்லூரியின் அதிபரால் நினைவுச்ச சின்மும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ரஸீன் ரஸ்மின்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .