2026 மார்ச் 16, திங்கட்கிழமை

புதையல் தோண்டிய 13 பேர் கைது

Mayu   / 2024 நவம்பர் 06 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொம்பே பிரதேசத்தில் உள்ள ஆலயமொன்றில் புதையல் தோண்டிய 13 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தொம்பே பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், சந்தேகநபர்கள் வந்த கார், வேன், இரண்டு பக்கவாட்டு வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதற்கமைய, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 22 முதல் 58 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் ஹெய்யன்துடுவ, சியம்பலாபே, தெல்கொட, மல்வான, தொம்பே, கேகாலை, ஹோமாகம, கடுவெல, கிரிந்திவெல, அம்பன்வல மற்றும் ஹன்வெல்ல பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X