2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலி

Janu   / 2025 நவம்பர் 19 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரலகங்வில - தெஹியத்தகண்டிய பிரதான வீதியில், சிறிபாலன விகாரைக்கு முன்பாக இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்து ஒரு பெண் காயமடைந்துள்ளதாக அரலகங்வில பொலிஸார் தெரிவித்தனர்.

அரலகங்வில, போகஸ் ஹந்திய பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய திலின பண்டார மற்றும் வெஹரகல, ருஹுணுகம பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய டீ.எம். திஸாநாயக்க பண்டார ஆகிய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதில் காயமடைந்த 47 வயதுடைய பெண் ஒருவர் காயமடைந்து பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X