Thipaan / 2015 மார்ச் 24 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்
அரசின் 100 நாட்கள்; வேலைத்திட்டத்தின் கீழ், மூதூர் பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலை, கலாசார விழா - 2015 மூதூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்றது.
பிரதேச செயலாளர் வீ.யூசுப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக திருமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் உள்ளக போக்குவரத்து பிரதி அமைச்சருமான எம்.எஸ்.தௌபீக் கலந்து கொண்டார்.
பிரதேசத்திலுள்ள வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு சுயதொழில் ஊக்குவிப்பு கொடுப்பனவு, விஷேட தேவையுடையவர்களுக்கான சக்கரக்கதிரைகள் வழங்கப்பட்டதுடன் கர்ப்பிணிகளுக்கு 2,000 ரூபாய் பெறுமதியான பொதிகளும் வழங்கப்பட்டன.
பிரதேச மட்டத்தில் கலை, கலாச்சார போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன.
இந்நிகழ்வில், மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.ஹரீஸ், உதவி தவிசாளர் எம்.எச்.ஹாஜா முகைதீன் உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள், மூதூர் பிரதேச செயலக உதவிச் செயலாளர் ஏ.தாஹீர் மற்றும் சமூக மட்டத் தலைவர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.

3 hours ago
8 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
22 Dec 2025