2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றத்தின் இந்துவிழி சஞ்சிகை வெளியீடு

Kogilavani   / 2012 மார்ச் 04 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 


(ரி.லோஹித்)

மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றத்தின் இந்துவிழி சஞ்சிகை வெளியீடும் அறநெறி விருத்திப்போட்டி பரிசளிப்பும் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்ற மண்டபத்தில் நடைபெற்றது.

மன்றத்தின் தலைவர் எம்.பவளகாந்தன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், கிழக்குமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.உதயகுமார், மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி எஸ்.பவளகாந்தன், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன், மட்டக்களப்பு மாவட்ட கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் தலைவர் ரஞ்சிதமூர்த்தி, வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் ஜெகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் மன்றத்தினால் நடத்தப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையிலான அறநெறி விருத்திப்போட்டி பரிசளிப்பு நடைபெற்றது.

இதில் மட்டக்களப்பு, பட்டிருப்பு, கல்குடா, மட்டக்களப்பு மேற்கு கல்வி வலையங்களைச் சேரந்த பாடசாலை மாணவர்கள் மாணவர்கள் பரிசில்களைப் பெற்றுக்கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .