2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

​ பெண் பிணத்தில் நகைகளைத் திருட முயற்சி: ஒருவர் கைது

Editorial   / 2026 மார்ச் 24 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 உயிரிழந்த பெண் ஒருவரின் சடலத்தில் இருந்த ஆபரணங்களைத் திருடும் நோக்கில், அவரது கல்லறையைத் தோண்டியதாகக் கூறப்படும் அதிர்ச்சிச் சம்பவம் மொருட்டுவை, லக்ஷபதிய பகுதியில் பதிவாகியுள்ளது. இது தொடர்பாக மொருட்டுவை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மறைந்த பெண்ணின் மகள் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை முன்னெடுக்கப்படுகிறது. தனது தாயின் மரணத்தின் பின்னர், அவருக்கு 'இமிட்டேஷன்' (கவரிங்) வகை மாரல், தோடு மற்றும் வளையல்களை அணிவித்து அடக்கம் செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

தாயின் மறைவுக்குப் பிந்தைய ஏழாம் நாள் தானம் வழங்குவதற்காக, கல்லறைக்குச் சென்று மெழுகுவர்த்தி ஏற்ற முயன்றபோது, இருவர் கல்லறையைத் தோண்டிக் கொண்டிருப்பதை அவர் கண்டுள்ளார். அவர்கள் இவரைக் கண்டதும் அங்கிருந்து தப்பியோடியதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண்ணின் உடல் மிகவும் விலை உயர்ந்த சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்ததாகப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதன் காரணமாகவே, உள்ளே பெறுமதியான பொருட்கள் இருக்கலாம் எனச் சந்தேக நபர்கள் கருதியிருக்கலாம் எனப் பொலிஸார் கருதுகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் குறித்த மயானத்தின் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றிய உத்தியோகத்தர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தப்பியோடிய இருவரும் மொருட்டுவை மாநகர சபையின் ஊழியர்கள் எனச் சந்தேகிக்கப்படுவதாகவும், அவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .