2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பில் கூத்து விழா

Kogilavani   / 2012 ஜூலை 07 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்ட செயலகம் நடாத்திய கூத்து விழா நேற்று வெள்ளிக்கிழமை மாலை மட்டக்களப்பு கல்லடி பேச்சியம்மன் ஆலய முன்றலில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட கலாசார இணைப்பாளர் டி.மலர்ச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.

இதன்போது, எருவில் கலைமகள் கலா மன்றத்தின் ஆடக சவுந்தரி கூத்தும், தேற்றாத்தீவு தேனுஜா கலைக்கழகத்தின் சீர்பாத தேவி கூத்தும் இடம்பெற்றன.

கன்னங்குடா கண்ணகி அம்மன் ஆலய முன்றலிலும் நேற்று முன்தினம் வியாழக்கிழமை கூத்துவிழா இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .