Kogilavani / 2015 ஏப்ரல் 05 , மு.ப. 08:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு - படையாண்டவெளி மாருதம் கலைக் கழகத்தினால் சிறப்பிக்கப்பட்ட 'மாருதத்தின் முத்தமிழ் முழக்கம்' கலை நிகழ்வு சனிக்கிழமை இரவு படையாண்டவெளி - பாலையடி நரசிங்க வைரவர் ஆலய முன்றலில் இடம்பெற்றது.
ஆலய உற்சவத்தின் இறுதிநாளை சிறப்பிக்கும் வகையில் சரித்திரநாடம், சமூக சீர்திருத்த நாடகம், நகைச்சுவை நாடகம் உள்ளிட்ட பல கலை நிகழ்வுகள் இதன்போது இடம்பெற்றன.
இதில் 'அகலிகை', 'துமபே சுவாஹா' போன்ற நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன.
கலைக்கழகத்தின் தலைவர் ரீ.ஜெமஸ்கரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக பேராசிரியர் எஸ்.மௌனகுரு, கோட்டக் கல்விப் பணிப்பாளர் ரீ.சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். சிறப்பித்தனர்.
இதன்போது கலைஞர்கள் கௌரவிப்பும் இடம்பெற்றது.
19 minute ago
39 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
39 minute ago
1 hours ago