Kogilavani / 2015 ஏப்ரல் 19 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

கைதடியைச் சேர்ந்த வே.புவிராஜ்ஜின் 'ஓலை' கவிதை நூல் வெளியீடு, கைதடி முத்துகுமாரசுவாமி மகா வித்தியாலயத்தில் சனிக்கிழமை (19) நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு, கைதடி கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் அனுசரணை வழங்கியது. வடமாகாண கல்வி அமைச்சின் உத்தியோகத்தர் சி.நிசாகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆசியுரையை ஓய்வுநிலை கோட்டக்கல்வி அலுவலர் நா.சத்தியநானும் வாழ்த்துரைகளை கிளிநொச்சி மாவட்ட சமூக சேவைகள் அலுவலர் வே.தபேந்திரனும் கைதடி முத்துக்குமாரசுவாமி மகா வித்தியாலய அதிபர் சி.பவளகுமாரனும் நிகழ்த்தினார்.
வெளியீட்டுரையை ஓய்வுநிலை அதிபர் லயன்.ப.செல்லத்துரை நிகழ்த்தினார். நூலின் முதல் பிரதியை மக்கள் வங்கியின் பரந்தன் கிளை முகாமையாளர் க.சிறிதரன் சார்பாக அவரது மனைவி திருமதி நிர்மலா சிறிதரன் பெற்றுக்கொண்டார்.



25 minute ago
45 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
45 minute ago
2 hours ago