Gavitha / 2015 மே 10 , மு.ப. 10:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்
வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் தெல்லிப்பழை பிரதேச கலாசார பேரவையின் ஒழுங்குபடுத்திய கவிதைப் பயிற்சிப் பட்டறையில் பங்குபற்றியவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் சனிக்கிழமை (09) நடைபெற்றது.
பிரதேச செயலாளர் க.ஸ்ரீமோகனன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
கவிதைப் பயிற்சி பட்டறையில் வளவாளராக கலந்துகொண்ட பருத்தித்துறை பிரதேச செயலாளர் த.ஜெயசீலன் கலந்துகொண்டவர்களுக்கான சான்றிதழ்களையும் வழங்கினார்.
இந்தப் பயிற்சி பட்டறையில் 60 பேர் கலந்துகொண்டு பயிற்சிகளைப் பெற்றுக்கொண்டனர்.

36 minute ago
25 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
25 Apr 2026