Kogilavani / 2015 ஜூன் 29 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸெட்.ஷாஜஹான்
நீர்கொழும்பு வலயக் கல்விக் காரியாலத்தின் அழகியல் பிரிவின் ஏற்பாட்டில் சித்திரக் கண்காட்சி ஒன்று நீர்கொழும்பு மாரிஸ்டெல்லா கல்லூரியின் உள்ளக விளையாட்டரங்கில் திங்கட்கழமை மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய (29,30 ஜுன்) இரு தினங்கள் நடைபெறுகின்றன.
இக்கண்காட்சியில் நீர்கொழும்பு வலயத்தைச் சேர்ந்த மாணவர்கள்; மற்றும் ஆசிரியர்களின் சித்திரங்களும் சிற்பக் கலைப்படைப்புக்ளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
நீர்கொழும்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே.ஏ.சி.பெர்னாந்து, கோட்டக் கல்வி அதிகாரிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
சித்திரப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு ஆரம்ப நிகழ்வில் சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கப்பட்டன.







15 minute ago
44 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
44 minute ago
52 minute ago