Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஜனவரி 13 , பி.ப. 06:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச் ஹஸ்பர், கீத்
விசாரணை எனும் பெயரில் சிறைகளில் பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி கையெழுத்து போராட்டம் திருகோணமலை சிவன் கோயிலடிக்கு முன்பாக போராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் திங்கட்கிழமை (13) இடம் பெற்றது
இதில் பலர் கலந்து கொண்டு கையெழுத்துக்களை இட்டதுடன் குறித்த கையெழுத்து போராட்டமானது வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் இடம் பெறவுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.
இதன் போது கருத்து தெரிவித்த இராவண சேனா அமைப்பின் தலைவர் கு.செந்தூரன், “அரசியல் கைதிகள் பல வருட காலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் விசாரணைகள் ஊடாக பலரும் விடுவிக்கப்பட்டு மீண்டும் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் இவர்களை புதிய அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும். தமிழ் மக்களின் குரலை கேட்டு அரசாங்கம் செவிசாய்த்து உடனடியாக விடுதலை செய்ய கோரியே இந்த கையெழுத்து போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்” என்றார்.
ஐந்து ஆண்டுகள் தொடக்கம் முப்பது ஆண்டுகள் வரை தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை மற்றும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை இந்த அரசாங்கம் சுதந்திர தினத்தன்றாவது விடுதலை செய்ய வேண்டும். யாழ். மண்ணில் வைத்து தேர்தலின் போது ஜனாதிபதி வாக்குறுதி அளித்தது போன்று பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என ஜனாதிபதி மற்றும் நீதி அமைச்சர் ஆகியோர் இடத்தில் கேட்டு கொள்கிறோம்.
இந்த கோரிக்கை அடங்கிய மகஜர் சட்டமா அதிபர்,நீதியமைச்சர், ஜனாதிபதியிடமும் கையளிப்பு உள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.
12 minute ago
13 minute ago
20 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
13 minute ago
20 minute ago
28 minute ago