2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

ஐ.நா ஆணையளரை செம்மணிக்கு அழைத்த தாயக செயலணி

R.Tharaniya   / 2025 ஜூன் 25 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தின் அதிகாரியை தாயகச் செயலணி உறுப்பினர்கள் சந்தித்து மகஜர் கையளித்து செம்மணிக்கு விஐயம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தாயகச் செயலணி மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் செல்வகுமார் தலைமையில் செவ்வாய்கிழமை (24) அன்று இந்த சந்திப்பு இடம்பெற்றது. 

வரலாற்று ரீதியாக இலங்கை சுதந்திரத்திற்கு பின்னரான காலப்பகுதியில் 1956 முதல் இன்று வரைக்குமான இன அளிப்பையும் அதற்குப் பின்னரான 17 வருடங்களான கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு  நடைபெற்றது என்பதை ஆவணப்படுத்தி அதற்கான மகஜரினை இரண்டு விதமாக குறிப்பாக வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் கையளித்திருந்தனர் .

மேலும் செம்மணி மனித புதை குழி  இருக்கும் இடத்திற்கு கட்டாயம் வர வேண்டும் எனவும் தாயகச் செயலணி ஊடாக மக்கள் வழங்கப்பட்ட மகஜரும்  அழைப்பும் கையளிக்கப்பட்டது.

கஜனா சந்திரபோஸ்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .