2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

கட்டாக்காலி மாடுகளினால் அதிகளவான விபத்துகள்

Janu   / 2025 ஜூன் 10 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் காலை முதல் மாலை வரை பிரதான வீதிகள் உள்ளக வீதிகளில் கட்டாக்காலி மாடுகளினால் விபத்துகள் ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் கூட சம்மாந்துறை  விளினியடி சந்தியில்   மாடுகளால் விபத்து ஏற்பட்டு முச்சக்கரவண்டியொன்று  சேதமடைந்துள்ளதுடன்  சாரதி காயமடைந்துள்ளார்.

இது தவிர மோட்டார் சைக்கிள்கள் இரண்டுடன் கட்டாக்காலி மாடுகள் மோதியதில் இருவர் செவ்வாய்க்கிழமை (10​)  காயமடைந்து   அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பில்  சம்மாந்துறை பொலிஸார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாறுக் ஷிஹான்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .