2025 ஜூன் 25, புதன்கிழமை

காத்தான்குடியில் பாதணி உற்பத்தி, விற்பனை நிலையம்

Freelancer   / 2023 ஜனவரி 24 , மு.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம் நூர்தீன்

புதிய காத்தான்குடி தெற்கு 167சி கிராம உத்தியோகத்தர் பிரிவில் உருவாக்கப்பட்டுள்ள சௌபாக்ய உற்பத்தி கிராமத்தின் திட்டத்தின் கீழ் பாதணி உற்பத்தி மற்றும் விற்பனை நிலையம் நிலையம் நேற்று (23) காத்தான்குடி பிரதேச செயலாளர் யு. உதய சிறீதரால் திறந்து வைக்கப்பட்டது.

சௌபாக்ய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பத்து மில்லியன் ரூபாய் பெறுமதியான நவீன இயந்திரங்களைக் கொண்டு, இந்தப் பாதணி உற்பத்தி நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் ஆரம்ப வைபவத்தில், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களான முஹம்மட் இர்பான், முஹம்மட் இர்ஸாத், முஹம்மட் நழீம் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .