2025 நவம்பர் 18, செவ்வாய்க்கிழமை

காயங்கேணியில் விபத்து ; ஒருவர் காயம்

Janu   / 2025 செப்டெம்பர் 08 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காயங்கேணி பிரதான வீதியில் லொறியொன்றும் முச்சக்கரவண்டியும் திங்கட்கிழமை (8) அன்று விபத்துக்குள்ளானது.  

திருகோணமலையில் இருந்து ஏறாவூர் நோக்கி பயணித்த லொறி முன்னால் பயணித்த முச்சக்கரவண்டியை முந்திச் செல்ல முற்பட்ட போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்தின் போது லொறியில் பயணித்தவர் காயமடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 எச்.எம்.எம்.பர்ஸான்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X