Janu / 2023 ஜூன் 22 , பி.ப. 01:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் சமூகப் பாதுகாப்பு நிதியத்தின் ஊடாக அக்கரைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட சமுர்த்தி நலன் பெறும் பயனாளிகளின் கா.பொ.த உயர் தரம் கற்க தகுதி பெற்ற மாணவர்களுக்கு 'சமுர்த்தி சிப்தொர கல்விப் புலமைப் பரிசில் ' வழங்கும் வைபவம் புதன்கிழமை (21) பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
அக்கரைப்பற்று பிரதேச செயலக சமுர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் எம்.ஜே.எம். நிஹ்மத்துல்லா தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ரி.எம்.எம்.அன்சார் பிரமத அதிதியாக கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சிப்தொர புலமைப்பரிசில் கொடுப்பனவை வழங்கி வைத்தார்.


அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .