2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

திருட்டு நகைகளுடன் பெண் கைது

Janu   / 2024 ஓகஸ்ட் 12 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விளினியடி பௌசியா மாவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள பிரபல நகைக்கடை ஒன்றில்  கடந்த புதன்கிழமை (7)   அன்று நகை திருடப்பட்டுள்ளதாக குறித்த நகைக்கடை உரிமையாளர் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

அதற்கமைய விசாரணைகளை மேற்கொண்டிருந்த சம்மாந்துறை பெரும் குற்றப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களால் ஞாயிற்றுக்கிழமை (11)  அன்று  அம்பாறை பிரதேசத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் வைத்து   சந்தேக நபரான  அம்பாறை ஹிங்குரான பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய பெண் திருடப்பட்ட நகைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த சந்தேக நபர்  தொடர்பான மேலதிக தகவல்கள் தெரிந்தால் 0672 260 222 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு  சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கும்படி பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

  பாறுக் ஷிஹான்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .