Freelancer / 2025 ஜூலை 04 , மு.ப. 06:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
தன்னால் கண்டெடுக்கப்பட்ட மணி பேர்ஸ் ஒன்றை கல்முனை மாநகர சபை ஊழியர் ஒருவர், உரிய நபரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று கல்முனைப் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.
கல்முனை மாநகர சபை ஊழியரின் இந்த முன்மாதிரியான செயற்பாட்டை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி அவர்கள் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
கல்முனை மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவை மேற்பார்வையாளரான எம்.எம்.எம். றிஸ்வான் நேற்று வியாழக்கிழமை (03) கல்முனை ஸாஹிராக் கல்லூரி வீதியில் கடமை நிமித்தம் சென்று கொண்டிருந்த போது, பெண்கள் பயன்படுத்தும் money purse ஒன்று வீதியில் கிடப்பதைக் கண்டெடுத்து, உடனடியாக மாநகர சபைக்கு விரைந்து, மாநகர ஆணையாளரிடம் அதனை ஒப்படைத்துள்ளார்.
அதையடுத்து, குறித்த பணப்பைக்குரிய குடும்பப் பெண், மாநகர ஆணையாளரின் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு, மாநகர சபை ஊழியரான எம்.எம்.எம். றிஸ்வானை அதனை கையளிக்கச் செய்தார் ஆணையாளர்.
சாய்ந்தமருது ஒஸ்மன் வீதியைச் சேர்ந்த இப்பெண், பொருட்களை கொள்வனவு செய்வதற்காக ஒரு தொகைப் பணத்தையும் கைத்தொலைபேசியையும் இந்தப் பையில் வைத்து எடுத்துச் சென்றதாகவும் அதனுள் தேசிய அடையாள அட்டை மற்றும் வங்கி கணக்குப் புத்தகம் எனபனவும் இருந்ததாகவும் அது தவறிக் காணாமல் போய், தேடிக் கொண்டிருந்த நிலையிலேயே தகவல் தரப்பட்டு, மாநகர சபை காரியாலயத்திற்கு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
தனது பணப்பையை மீட்டுத்தந்த ஊழியருக்கு அவர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டதுடன் குறித்த ஊழியருக்கு அன்பளிப்பு வழங்கவும் முற்பட்டார். எனினும் அந்த ஊழியர் அதனைப் பெற்றுக் கொள்ள மறுத்து விட்டார்.

46 minute ago
50 minute ago
59 minute ago
13 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
50 minute ago
59 minute ago
13 Mar 2026