2026 மார்ச் 17, செவ்வாய்க்கிழமை

அடுத்த 36 மணித்தியாலங்கள் குறித்து எச்சரிக்கை

Freelancer   / 2024 ஜூன் 01 , பி.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்த 36 மணி நேரத்திற்கு கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று மாலை வெளியிட்ட புதிய வானிலை முன்னறிவித்தலில் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவான கனமழை பெய்யக்கூடும் என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளையில் இடைக்கிடையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களிடம் கோரியுள்ளது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X