Editorial / 2024 மே 27 , பி.ப. 02:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹெலிகொப்டர் வாங்குவதாக பணம் பெற்றுக்கொண்டு எழுபது மில்லியன் ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவுரா லங்கா நிறுவனத்தின் தலைவர் விரஞ்சித் தபுகலவை பிணையில் விடுவிக்க கொழும்பு மேலதிக நீதவான் திருமதி பவித்ரா சஞ்சீவனி பத்திராஜா திங்கட்கிழமை (27) உத்தரவிட்டுள்ளார்.
IWS ஹோல்டிங் நிறுவனம் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், சந்தேகநபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் கடந்த 22ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
சந்தேக நபருக்கு தலா 100 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு பிணைகள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
9 hours ago
20 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
20 Apr 2026