2025 ஜூலை 02, புதன்கிழமை

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலையில் மாற்றம்...

Freelancer   / 2024 மார்ச் 04 , பி.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 9 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 447 ரூபாய்.

சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.புதிய விலை 458 ரூபாய்.

அத்துடன், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 05 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
புதிய விலை 257 ரூபாய்.

அத்துடன், ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை மற்றும் ஒட்டோ டீசலின் விலையில் மாற்றம் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேலேளை,  லங்கா ஐ.ஓ.சி மற்றும் சினோபெக் எரிபொருள் நிறுவனங்களும் சிபெட்கோ எரிபொருள் நிறுவனத்தின் விலைக்கு ஏற்ப எரிபொருள் விலையை குறைக்கவுள்ளதாக அறிவித்துள்ளன. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .