2026 மார்ச் 14, சனிக்கிழமை

கடலில் குளித்த இந்திய தம்பதியினர் பலி

J.A. George   / 2024 ஜூன் 05 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிரிந்த பகுதியில் கடலில் குளித்த வெளிநாட்டு தம்பதியொன்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 35 வயதுடைய ஆண் மற்றும் 33 வயதுடைய இந்தியப் பிரஜைகள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

பலத்த அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்ட இவர்கள், தெபரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் அவர்களது குடும்பத்தினருடன் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கிரிந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X