Super User / 2012 மே 20 , பி.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்கம் சனிக்கிழமை நடத்திய போர் வெற்றித் தினக் கொண்டாட்டங்களை இலங்கையில் வாழும் தமிழ் மக்களும் கொண்டாடினார்களா? குறைந்த பட்சம் தமிழ் மக்கள் மே மாதம் 19ஆம் திகதியை வெற்றித் தினமாக கருதுகிறார்களா? இந்தக் கேள்விகள் நிச்சயமாக தமிழ் மக்கள் மத்தியில் சர்ச்சைக்குரியதாகவே இருக்கின்றன எனலாம்.
அதேவேளை, புலிகள் தமது பிள்ளைகளை பலாத்காரமாக பிடித்துக் கொண்டு சென்று கட்டாய இராணுவ சேவையில் ஈடுபடுத்துவார்கள் என, போர் நடைபெற்றுக் கொண்டு இருந்த காலத்தில் தமிழ் மக்களில் பலர் எப்போதும் பதறிய மனதுடன் வாழ வேண்டிய நிலை இருந்தது. இப்போது அவர்களுக்கு அந்த பயமும் இல்லை. பொர் நடைபெற்றுக் கொண்டு இருந்த காலத்தில் தமிழ் சிறார்களுக்கு நாட்டின் தென் பகுதியில் சிறார்களுக்கு போல் நிம்மதியாக கல்வி கற்கும் வாய்ப்பு இருக்கவில்லை. வசதிகள் இல்லாவிட்டாலும் இப்போது தமிழ் சிறார்களுக்கும் அந்த நிம்மதி கிடைத்துள்ளது எனலாம்.
புலிகள் தந்திரோபாய ரீதியில் அந்த சமாதான பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டார்களேயல்லாமல் பேச்சுவார்த்தைகள் மூலம் சமாதானத்தை அடைய முடியும் என்றோ அடைய வேண்டும் என்றோ இருக்கவில்லை. எனவே, வெளிநாட்டு கண்காணிப்பு இருக்கும் போதே அவர்கள் தமது விருப்பப்படி போர் நிறுத்த உடன்படிக்கையை மீறினர் 2 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
7 hours ago