A.P.Mathan / 2012 செப்டெம்பர் 25 , மு.ப. 08:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு சமாஜ்வாடிக் கட்சி தலைவர் முலயாம் சிங் யாதவ் - ஒக்ஸிஜன் கொடுத்துள்ளார். அதனால் மம்தா பாணர்ஜி தலைமையிலான 19 நாடாளுமன்ற உறுப்பினர்கள் - பிரதமர் மன்மோகன்சிங் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுள்ள நிலையிலும், அரசின் ஸ்திரத்தன்மைக்கு ஆபத்து இல்லாமல் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் முலயாம்சிங்கின் ஆதரவில் மத்திய அரசு நீடிப்பது என்பது "எலியை இடுப்பில் கட்டிக் கொண்டு" இருப்பது போலவே என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக இருக்கிறது. எப்போதுமே டெல்லி அரசியலானது மாநில அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதே நிலை தமிழகத்திற்கும் பொருந்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மாநிலத்தில் உள்ள அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.தி.மு.க.), திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க.) ஆகிய இரு கட்சிகளுமே இந்த தாக்கத்தில் சிக்கிக் கொள்ளத் தவறியதில்லை. மத்தியில் இருக்கும் அரசுக்கு தாங்கள் அளித்து வரும் ஆதரவை வாபஸ் வாங்கினால் அது தங்களுக்கு எந்தவிதத்தில் பலத்தைக் கொடுக்கும், அல்லது பாதகத்தை விளைவிக்கும் என்ற இக்கட்டில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் அவ்வப்போது மாட்டிக் கொண்டுள்ளன. அதே மாதிரியான சிக்கலில் இப்போதும் இரு கட்சித் தலைவர்களும் இருக்கிறார்கள். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும், தி.மு.க. தலைவர் கருணாநிதியும் "அகில இந்திய அரசியல் தாக்கத்தை" தமிழக அரசியலில் எப்படி பயன்படுத்திக் கொள்வது என்ற முடிவு எடுக்க முடியாமல் தயங்கி நிற்கிறார்கள்.அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .