S.Renuka / 2026 பெப்ரவரி 15 , மு.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
தலங்கம, அகுரேகொடவில் வழக்கறிஞர் மற்றும் அவரது மனைவியை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் துப்பாக்கிதாரிகள் பயன்படுத்தியதாக நம்பப்படும் காரை நுகேகொட பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு இன்று (15) அதிகாலை கண்டுபிடித்துள்ளது.

காலி, குட்டியாவத்தையில் உள்ள ஒரு துணை சாலையில், தீப்பிடித்து எரிந்த நிலையில், வாகனம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வழக்கறிஞர் புத்திக மல்லவராச்சி மற்றும் அவரது மனைவியைக் கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட கார் காலியில் கைவிடப்பட்டதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்ததை அடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, வாகனம் தீப்பிடித்து எரிந்ததைக் கண்டுள்ளனர்.
வெளிநாட்டில் மறைந்திருப்பதாக நம்பப்படும் 'கரந்தெனியே சுத்தா' என்றும் அழைக்கப்படும் ஜெயலத் சில்வாவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் திட்டமிட்ட குற்றவாளிகளால் இந்த இரட்டைக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று புலனாய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
44 minute ago
50 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
50 minute ago
54 minute ago