2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

அகலவத்த அரச வங்கிக்குப் பூட்டு

S. Shivany   / 2020 ஒக்டோபர் 19 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட ,  மத்துகம-கொழும்பு சொகுசு பஸ் சாரதி, அகலவத்த பகுதியிலுள்ள அரச ​வங்கி ஒன்றுக்கு, கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்றுள்ளதையடுத்து, அதனை  இன்று (19) முதல் மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக, அகலவத்த சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

 மேற்படி சாரதி அடங்கலாக  இந்தப் பகுதியில் இதுவரை தொற்றாளர்களாக  மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் அகலவத்த ஓமந்த வீதி, வலவ்வத்த மற்றும் பேரகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களெனத் தெரிவிக்கப்படுகிறது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .