Freelancer / 2025 டிசெம்பர் 18 , மு.ப. 08:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய இரண்டு மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு அதிதீவிர மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நுவரெலியவின், மத்துரட்ட, நில்தண்டஹின்ன, ஹங்குராங்கெத்த மற்றும் வலப்பனை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் அதனை அண்மித்த பிரதேசங்களுக்கும் மண்சரிவுக்கான சிவப்பு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கண்டி - தொழுவ, உடுதும்பர, மெததும்பர ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் அதனை அண்மித்த பிரதேசங்களுக்கும் மூன்றாம் நிலை மண்சரிவு அபாய சிவப்பு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .