Simrith / 2024 ஏப்ரல் 02 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிங்கப்பூர் சரக்குக் கப்பல் ஒன்று அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு அபாயகரமான பொருட்களை ஏற்றி வந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை மத்திய சுற்றாடல் அதிகாரசபை ஆரம்பித்துள்ளதாக சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
அபாயகரமான பொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்குக் கப்பல் இலங்கைக்கு செல்வது CEAக்கு தெரியாது என அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
கடந்த மார்ச் 26ஆம் திகதி 764 தொன்கள் அபாயகரமான பொருட்களுடன் அமெரிக்காவின் பால்டிமோர் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளான Maersk நிறுவனத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்ட சிங்கப்பூர் சரக்குக் கப்பலான டாலி குறித்து ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் அரசாங்கத்தின் பிரதிபலிப்பைக் கேட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டுக்குத் தெரியாமல் அபாயகரமான பொருட்களை ஏற்றிக்கொண்டு இவ்வாறான சரக்குக் கப்பல் எவ்வாறு இலங்கை நோக்கிச் சென்றது என்பது தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
சரக்குக் கப்பலில் விபத்தை சந்திக்காத வரையில், அதில் உள்ள அபாயகரமான பொருட்கள் குறித்து அறிந்திருக்க மாட்டோம். அப்படிப்பட்ட கப்பல் எப்படி இலங்கைக்கு சென்றது என்பது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும், என்றார்.
கப்பல் விபத்துக்குள்ளாகியிருக்காவிட்டால் சரக்குக் கப்பலில் உள்ள அபாயகரமான பொருட்கள் குறித்து இலங்கை அறிந்திருக்காது என்ற உண்மையை அமைச்சர் வக்கும்புர ஒப்புக்கொண்டார்.
சரக்குக் கப்பல் தொடர்பில் இலங்கை சுங்கம் மற்றும் கொழும்பு துறைமுகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான அறிக்கையை சபைக்கு வழங்குவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
17 Feb 2026
17 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 Feb 2026
17 Feb 2026