2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

அப்பாச்சியிடம் ஹக்கீம் சொன்னது என்ன?

Editorial   / 2025 ஓகஸ்ட் 21 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்கள் உதவி போரின் வெற்றியின் 80வது ஆண்டு நிறைவையும் உலக பாசிச எதிர்ப்பு போரை நினைவு கூரும் வகையில் சீனா தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், புதன்கிழமை (20) இடம்பெற்றது.

இதில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ஏதோவொரு ரகசியம் ​கூறியுள்ளார். இந்த புகைப்படம் வைரலாகியுள்ளது.

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்)” எனும் சட்டமூலம் பேரும் பொருளாக இருக்கும் நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பார்வையிடுவதற்காக, கிராமங்களில் விளைந்த உணவு பொருட்களை எடுத்துக் கொண்டு வந்த தேரர்கள் தலைமையிலான ஒரு குழுவினர், அப்பாச்சியை பார்வையிட வந்தோம் என்றனர்.  ஆகையால், அப்பாச்சி பேசும் பொருளாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X