Freelancer / 2022 மே 14 , மு.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆர்.யசி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தில் அமைக்கும் புதிய அமைச்சரவையில் அமைச்சுப்பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலையில் இருந்து மீட்டெடுக்க ஒத்துழைப்பு வழங்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல அரசியல் கட்சிகளுக்கும் தனித்தனியே அழைப்பு விடுத்துள்ளார்.
புதிய பிரதமராக பதவியேற்ற ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நேற்றைய தினம் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் விமல்,உதய, வாசு தலைமையிலான அணியினர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி உள்ளிட்ட ஏனைய மலையகக் கட்சிகளுக்கு தனித்தனியே அழைப்பு விடுத்துள்ளார்.
ஒரு சிலருடன் நேரடியாக தொலைபேசியிலும் உரையாடியுள்ளார். எனினும் ரணிலின் அழைப்பை பிரதான கட்சிகள் நிராகரித்துள்ளதுடன் ஒரு சிலர் மறைமுகமாக ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
21 minute ago
51 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
51 minute ago
1 hours ago
3 hours ago