2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

அமைச்சரவைக் கூட்டத்தில் வசந்த சேனாநாயக்க பங்கேற்பு

Editorial   / 2018 நவம்பர் 22 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

தன்னுடைய அமைச்சர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக கடந்த 14ஆம் திகதியன்று அறிவித்துவிட்டு, ஐக்கிய தேசியக் கட்சியுடன் பின்கதவால் இணைந்துகொண்ட சுற்றுலாத்துறை அமைச்சர் வசந்த சேனாநாயக்க, நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றார்.

 

அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (21) நடைபெற்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோரடங்கிய அரசாங்கத்துக்குப் பெரும்பான்மை இல்லையென்றும், ஆகையால், அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்யப்போவதாகவும் வசந்த சேனாநாயக்க அறிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே, நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் பங்கேற்றுள்ளார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .