2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

கெஹெலிய உட்பட 12 பேருக்கு அழைப்பு

Freelancer   / 2025 ஜூலை 07 , பி.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

தரமற்ற தடுப்பூசிகளை கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட 12 பிரதிவாதிகளை எதிர்வரும் 11 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றம் இன்று அழைப்பாணை பிறப்பித்துள்ளது. 

பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றப்பத்திரிகைகளை கையளிக்க நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இவ்வாறு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, 13 குற்றப்பத்திரிகைகளின் கீழ் பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

இந்த வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதிகள் மஹேன் வீரமன், அமாலி ரணவீர மற்றும் பிரதீப் அபேரத்ன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வு முன் விசாரிக்கப்பட உள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .