2025 ஜூன் 23, திங்கட்கிழமை

’அமைச்சு பதவியில் இருந்து ரஞ்சன் நீக்கப்படவேண்டும்’

Editorial   / 2019 ஜூலை 17 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராஜாங்க அமைச்சர் ரஞசன் ராமநாயக்க அமைச்சு பதவி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என, சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்துள்ளார்.

ராஜாங்க அமைச்சர் ரஞசன் ராமநாயக்கவுக்கு எதிரான முறைப்பாடுகளை விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்து, தேரர்கள் சிலர் பொலிஸ் தலையகத்துக்கு இன்று (17) வருகை தந்திருந்தனர்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளிடுகையில் மாகல்கந்தே சுதந்த தேரர்  இந்த விடயத்தை கூறியுள்ளார்.

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹரான் நடத்தியது தற்கொலை குண்டு தாக்குதல் என்றும்,  இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நடத்துவது அணுகுண்டு தாக்குதல் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .