Editorial / 2025 மே 01 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிடியாணைபிறப்பிக்கப்பட்டுள்ள பிணையாளியான தாயை கைது செய்வதற்காக சென்றிருந்த போது,அத்தாய் இன்மையால், அவருடைய எட்டு வயது பாடசாலை மாணவனை கைது செய்து, பொலிஸில் இரவுநேரத்தில் தடுத்து வைத்திருந்தமை தொடர்பில், வெலிஓயா பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரிக்குநீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கட்டளையிடப்பட்டுள்ளது.
பதவியசுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் தனிப்பட்ட முறையில் ஆஜராகுமாறு,கெப்பத்திகொல்லாவ நீதவான் கசுன் காஞ்சன தசநாயக்க கட்டளையிட்டுள்ளார்.
இந்தசம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகளை முன்னெடுத்து நீதிமன்றத்தில் அறிக்கையிடுமாறுமுல்லைத்தீவு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிக்கு நீதவான் கட்டளையிட்டுள்ளார்.
அந்தசிறுவனின் பாதுகாப்பு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து அதன் அறிக்கையையும்சமர்ப்பிக்குமாறு நன்னடத்தை அதிகாரிக்கு நீதவான் கட்டளையிட்டுள்ளார்.
வெலிஓயா ஹேலஓவெவகிராமத்தில் சந்தேக நபர் ஒருவருக்கு பிணையாளியாக நின்ற, சந்தேகநபரின் மனைவிக்குபிடியாணை பிறப்பிக்கப்பட்டமையால் கைது செய்வதற்கு பொலிஸார் சென்றிருந்துள்ளனர்.அப்போது அந்த பெண் இன்மையால், அந்த பெண்ணின் 8 வயது மகனை கைது செய்து பொலிஸ் நிலையத்துக்குஅழைத்து வந்துள்ளனர்.
பொலிஸாரின்இந்த நடவடிக்கை சிறுவனின் உரிமையை மீறியுள்ளது. ஆகையால், அச்சிறுவனுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும்என கெப்பத்திகொல்லாவ நீதவான் நீதிமன்றத்தின் சட்டத்தரணிகள் குழு, நீதிமன்றத்தில்கோரி நின்றது. இதனையடுத்தே, நீதவான் மேற்கண்டவாறு கட்டளையிட்டுள்ளார்.
11 minute ago
1 hours ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
1 hours ago
2 hours ago
4 hours ago