2025 ஜூன் 09, திங்கட்கிழமை

அரசாங்க நிறுவனத்தை தனியார் மயப்படுத்த மாட்டேன்

Kogilavani   / 2016 ஓகஸ்ட் 11 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

'இலாபமீட்டும் எந்தவொரு அரசாங்க நிறுவனத்தையும் தனியார் மயப்படுத்த மாட்டேன்' என தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 'துறைமுகத்தை தனியார் மயப்படுத்த தேவையில்லை' எனவும் குறிப்பிட்டார்.

இலங்கை துறைமுக அதிகாரசபையின் CFS 01 என பெயரிடப்பட்டுள்ள கொள்கலன்கள் செயற்பாட்டு மத்திய நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வு, நேற்று புதன்கிழமை நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி கூறியதாவது,

'இந்நாட்டின் துறைமுகத்தை பாதுகாக்கும் பொருட்டு, அமைச்சருக்கு ஒத்துழைப்பு வழங்குவது அனைவரது கடமையாகும்.  'அரசாங்க நிறுவனங்களை தனியார் நிறுவனங்களுக்கு விற்பனைச் செய்வது தொடர்பாக ஊடகங்களில் பல்வேறுப்பட்ட தகவல்கள் வெளியிடப்படுகின்றன. பல காரணிகள் விரிவான கலந்துரையாடல்களுக்கு உட்படுகின்றன.

துறைமுகத்தை எடுத்தோமேயானால் அதனுள் உள்ள ஒவ்வொரு பகுதிகள் தொடர்பாகவும் பல்வேறுப்பட்ட கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன. ஊடகங்களிலும் செய்திகள் வெளியிடப்பட்டன.

இலாபமீட்டும் எந்தவொரு அரசாங்க நிறுவனத்தையும் விற்பனை செய்வது தொடர்பாக கொள்கை அடிப்படையில் நான் ஒரு போதும் உடன்படமாட்டேன் என்பதை மிக தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

மேலும், எம்மிடம் நட்டமடையும் நிறுவனங்கள் இருக்குமாயின் அவற்றை இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றியமைத்துக் கொள்ளும் பொருட்டு பல்வேறுப்பட்ட நடவடிக்கைகளை  எடுக்க வேண்டும்.  ஒரு சில சந்தர்பங்களில் நாம் தனியார் நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய நிலைமை ஏற்படும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .