Janu / 2026 மே 12 , பி.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் மெத்தியூ டக்வேர்த்க்கும் (Matthew Duckworth), வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கும் இடையில் செவ்வாய்க்கிழமை (12) சந்திப்பொன்று இடம்பெற்றது.
இச்சந்திப்பு முல்லைத்தீவு, கள்ளப்பாடு வடக்கு பகுதியில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் உள்ளிட்ட வன்னிப் பிராந்தியத்தில் நிலவும் நில ஆக்கிரமிப்புகள், விவசாயிகள் மற்றும் மீனவ மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், மக்களின் வாழ்வாதார நிலைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.
மேலும், முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகம் மற்றும் அதன் பின்னணி தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகருக்குத் தெளிவுபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சண்முகம் தவசீலன்

5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago