Freelancer / 2026 பெப்ரவரி 17 , பி.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடளாவிய ரீதியில் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்காக திறந்த அடிப்படையில் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நிபந்தனைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கடந்த பெப்ரவரி 2 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2474/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் படி, விண்ணப்பதாரிகள் தமது பட்டத் தகைமைகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டிய இறுதித் திகதி 2026 மார்ச் 5 ஆம் திகதி என நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அங்கீகாரம் நேற்று வழங்கப்பட்டதையடுத்து, வர்த்தமானியில் இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன் மூலம் அதிகளவான பட்டதாரிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பு கிட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. R
13 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
26 minute ago