2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

இரத்தினபுரிக்கு புதிய தமிழ் பாடசாலை

Kamal   / 2019 செப்டெம்பர் 19 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி மாவட்டத்துக்கு தனியனதொரு தமிழ் தேசிய பாடசாலை அமைக்கப்பட உள்ளதாக பிரதி அமைச்சர் கருணாரத்ன பரனவிதான தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்து தெரிவித்த அவர், 

அரசகரும மொழிகள் அமைச்சு, மலைநாட்டு புதிய கிராமங்கள், சமூக அபிவிருத்தி அமைச்சு, இரத்தினபுரி வர்தகர்களின் உதவியை பெற்றுகொண்டு இந்த பாடசாலை அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேற்படி பாடசாலை அமைப்பதற்கான இரத்தினபுரி புதிய நகர பகுதியில் காணியொன்று பெற்றுகொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .