2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

இரு பஸ்கள் மோதிக்கொண்டதில் 80 பேர் காயம்

Editorial   / 2018 ஒக்டோபர் 12 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹம்பாந்தோட்டை - லுனுகம்வெஹர பிரதேசத்தில், இன்று (12) நண்பகல் 12 மணியளவில், இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், சுமார் 80 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அம்பாறையிலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த பயணிகள் பஸ்ஸும் தெஹியத்தகண்டியிலிருந்து காலி நோக்கிப் பயணித்த பஸ்ஸுமே, இவ்வாறு ​மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில், குறித்த இரு பஸ்களின் சாரதிகள் உட்பட 50 பேர் காயமடைந்த நிலையில், லுனுகம்வெஹர, தெம்பரவெவ மற்றும் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் ​தொடர்பான மேலதிக விசாரணைகளை, லுனுகம்வெஹர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .