2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது டிராகன் விண்கலம்

Editorial   / 2025 ஜூலை 15 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்​தில் தங்​கி​யிருந்து ஆய்வுகளை மேற்கொண்ட இந்​திய வீரர் ஷுபன்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேர், டிராகன் விண்கலம் மூலம் பத்திரமாக பூமிக்கு வந்து சேர்ந்தனர். அமெரிக்​கா​வின் கலிபோர்போனியா அருகே பசிபிக் கடலில் விண்கலம் பத்திரமாக இறங்கியது.

ஷுபன்ஷு சுக்லா உள்ளிட்ட 4 விண்​வெளி வீரர்​களும் திங்கட்கிழமை (14) மாலை 4.35 மணிக்கு சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்​தில் இருந்து டிராகன் விண்​கலத்​தில் பூமிக்கு புறப்​பட்​டனர். சுமார் 23 மணி நேர பயணத்​துக்​குப் பிறகு டிராகன் விண்​கலம் இந்திய நேரப்படி, செவ்வாய்க்கிழமை (15) மாலை 3 மணி அளவில் பூமியை வந்​தடைந்தது. அமெரிக்​கா​வின் கலி​போர்​னியா மாகாணம் பசிபிக் கடலில் விண்​கலம் இறங்கியது. சுமார் 5.5 கி.மீ. உயரத்​தில் பாராசூட்​கள் விரிக்​கப்​பட்டு விண்கலம் கடலில் பாது​காப்​பாக இறக்​கப்​பட்டது.

டிராகன் விண்​கலத்​தின் ஸ்பேஸ் எக்ஸ் நிறு​வனம் மற்​றும் நாசா​வின் மீட்​புக் குழுவினர் 4 விண்​வெளி வீரர்​களை​யும் விண்​கலத்​தில் இருந்து பத்​திர​மாக மீட்டனர். இதன்​பிறகு சு​மார்​ இரண்​டு ​வாரங்​கள்​, 4 வீரர்​களும்​ பல்​வேறு மருத்​துவ ஆய்​வு​களுக்​கு உட்​படுத்​தப்​படு​வார்​கள்​. இந்​த நடை​முறை​களுக்​குப்​ பிறகே ஷுபன்​ஷு சுக்​லா இந்​தி​யா திரும்​பு​வார்​.

முன்னதாக, அமெரிக்​கா​வின் அக்​ஸி​யம் ஸ்பேஸ், நாசா, இஸ்​ரோ, ஐரோப்​பிய விண்​வெளி முகமை ஆகியவை இணைந்து கடந்த 25-ம் திகதி சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்​துக்கு பால்​கன் ராக்கெட் மூலம் டிராகன் விண்​கலத்தை அனுப்​பின. இந்த விண்​கலத்​தில் இந்​திய வீரர் ஷுபன்ஷு சுக்​லா, அமெரிக்​கா​வின் பெக்கி விட்​சன், போலந்​தின் ஸ்லா​வோகி உஸ்​னான்​ஸ்​கி, ஹங்​கேரி​யின் திபோர் கபு ஆகியோர் 28 மணி நேரம் பயணம் செய்து கடந்த 26-ம் திகதி சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்தை சென்​றடைந்​தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .