2025 ஜூலை 07, திங்கட்கிழமை

இலங்கையர்களுக்கு நிரந்தர வதிவிட விசா

Editorial   / 2019 ஜனவரி 18 , மு.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரட்டை பிரஜாவுரிமையை அங்கிகரிக்காத நாடுகளில் வாழும் இலங்கையர்களுக்காக, நிரந்தர வதிவிட விசாவை வழங்க, குடிவரவு குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத்தகைய இலங்கையர்களின் அறிவையும் ஆற்றல்களையும், நாட்டின் அபிவிருத்தியில் இணைத்துக் கொள்வது, இத்திட்டத்தின் நோக்கம் என்றும் இத்தகைய நிரந்தர வதிவிட விசாவை பெற்றுக்கொள்வதன் மூலம், வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் பல உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இரட்டை பிரஜாவுரிமை கோரிய மேலும் ஆயிரம் பேருக்கு, இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்படவுள்ளது. மேலும் 5 ஆயிரம் பேர் இரட்டை பிரஜாவுரிமைக்காகக் காத்திருப்பதாக அரச தகவல் திணைக்களத்தின் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .